திடீரென உதறிய உடல் - அடுத்த நொடியில் பலி - கன்னியாகுமரியில் பயங்கரம்

x

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விசைப்படகு பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி படகு உரிமையாளர் உயிரிழந்தார். இரவிபுத்தன்துறையை சேர்ந்த சேசடிமை என்பவர், பரக்காணி பகுதியில் உள்ள படகு சரிபார்க்கும் இடத்தில், தனது படகை நிறுத்தி வைத்து பழுதுபார்த்துள்ளார். படகில் நடைபெற்ற வெல்டிங் வேலையை கண்காணித்தபோது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, சேசடிமை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்