அம்மா, அப்பா உயிரை பறித்த எமன்... கருவில் கலைந்த உயிர் - நடுரோட்டில் கதறி அழுத 2 வயது குழந்தை

x

வேப்பூர் அருகே கொளவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்பவர், கர்ப்பமான தனது மனைவி மதுமிதாவை, மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இந்த தம்பதியுடன், அவர்களது 2 வயது குழந்தையும் சென்றுள்ளது. இதனிடையே, சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், குழந்தை உட்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 வயது குழந்தை காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்