"வெட்ட வராங்க, எங்களை காப்பாத்துங்க.." - அழுது நின்ற குடும்பம்.. சேலத்தில் பயங்கரம்

x

சேலத்தில் குடும்பத்துடன் விவசாய நிலத்தில் இறங்கி, விவசாயி கதறி அழுது போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மேட்டுவெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்த ஜெயராமன், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். குறிப்பிட்ட அந்த நிலத்தின் மீது அதன் உரிமையாளர், வங்கியில் வாங்கிய கடன் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் இருந்து வருகிறது. இந்தநிலையில் ராமராஜன் என்பவர், தான் வங்கியிடமிருந்து நிலத்தை வாங்கிவிட்டதாக கூறி, ஜெயராமனை நிலத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெயராமன், குடும்பத்தினருடன் நிலத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், இல்லையென்றால் நிலத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்