ஜூனியருக்கு வழக்கறிஞர் செய்த கொடூரம்

x

தன்னிடம் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் பிரபுராம். வழக்கறிஞரான இவரிடம், இளம் பெண் ஒருவர் ஜூனியர் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், அப்பெண்ணிடம் பிரபுராம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாரளித்த நிலையில், பிரபுராம் மீது பாலியல் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்