ஆயுத பூஜைக்கு அலைமோதிய கூட்டம் - திடீரென தீப்பிடித்து எறிந்த கார்-கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு

x

கோயம்பேடு மார்கெட்டில் கார் தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, காரின் டயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்த போதிலும், கார் முழுவதும் கருகி நாசமானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்