சென்னையில் மாடு முட்டிய சம்பவம் - 10 நாள் போராடி பிரிந்த உயிர்

x

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில், மாடு முட்டியதில் காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 18-ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்