முகத்தை கவரால் முடி.. மூக்கில் டியூப் விட்டு வீட்டில் கிடந்த உடல் - சிக்கிய முக்கயமான ஒற்றை லெட்டர்

x

கோவை அருகே, நைட்ரஜன் வாயுவை முகர்ந்து கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சி நேதாஜிபுரத்தை சேர்ந்த தனபிரபு என்பவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். வீட்டில் தனியாக வசித்து வந்த தனபிரபு, முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடி, மூக்கில் டியூப் மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வீட்டில் சோதனை செய்தபோது, நைட்ரஜன் சிலிண்டர் இருந்தது தெரியவந்தது. சிலிண்டரில் இருந்து நைட்ரஜன் வாயுவை திறந்து மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே, தனபிரபு தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில், வாழ விரும்பவில்லை என்றும், தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்