கனமழையால் மூழ்கிய சாலை..வாகன ஓட்டிகள் அவதி

x

கோவை மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அருகே கனமழையால் தார் சாலை தண்ணீரில் மூழ்கிய நிலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது... அன்னதாசம் பாளையம் அருகே மேடூர் இலுப்ப நத்தம் கிராமத்திற்கு இடையே உள்ள வண்ணான் துறை பள்ளத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 100 அடி மீட்டர் நீளத்திற்கு தார் சாலை தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆயிரக் கணக்கான வாழை மரங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது... ஆங்காங்கே சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண்ணரிப்பு காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்