திட்டியதை கண்டுகொள்ளாததால் பைக் ஓட்டியை தள்ளிவிட்ட கொடூரன்.. தமிழகத்தில் இப்படியொரு கோர காட்சியா?

x

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் தள்ளிவிடும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... துடியலூரில் இருந்து கோவை நோக்கி சென்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகளிடையே வாக்கு வாதம் எழுந்துள்ளது... இதில் நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற நபரை கவுண்டம்பாளையம் மேம்பாலத்திற்கு கீழே எதிர்பாராத நேரத்தில் மற்றொரு வாகனத்தில் வந்த நபர் திடீரென தள்ளி விட்டார்... அந்த நபர் திடீரென வாக்குவாதம் செய்ததாகவும், நாராயணன் அதை கண்டு கொள்ளாமல் வந்ததால் கோபத்தில் தள்ளி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாராயணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விபத்து பதிவான அதிர்ச்சிகர காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்