அல்வா மற்றும் விளம்பர பதாகைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்

x

நெல்லை மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், கூட்டத்தில் பேசும் எந்தவித பொருளும் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பதாகவும், மாநகரப் பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் வேதனை தெரிவித்தனர். அதிகாரிகள் முறையாக பணி செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, அடிப்படை வசதிகள் கூட பொதுமக்கள் செய்ய முடியாத நிலையில் தவிப்பதாக கூறினர். அதே நேரத்தில், திமுக பெண் கவுன்சிலர்கள் சிலர், குப்பை மேடாக காட்சியளிக்கும் தங்களது வார்டுகளின் புகைப்படங்கள் அல்வா மற்றும் விளம்பரப் பதாகைகளுடன் மேயர் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்