"நீ ஒன்னும் கலெக்டர் இல்ல"-தடுத்த போலீஸ்... கெஞ்சிய மனைவி.. நடுரோட்டில் கவுன்சிலரை அலறவிட்ட இருவர்

x

கோவை துடியலூர் அருகே கார் ஒன்றும், ஜீப் ஒன்றும் மோதுவது போன்று சென்றது. அப்போது, காரில் இருந்த ஸ்டீபன் மற்றும் டோமினிக் ஆகியோர், ஜீப்பை ஓட்டி வந்த செந்தில்நாதன் என்பவரை தாக்கியுள்ளனர். இதனால், அவர்களை தடுக்க செந்தில்நாத‌னின் மனைவி கெஞ்சிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்களும், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கவி சரவணகுமாரும் தடுக்க முயன்றனர். அப்போது, யார் நீ எனக் கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் பாய்ந்தனர். தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளரையும் ஸ்டீபன் மற்றும் டோமினிக் மிரட்டினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்