திருவிழாக்கள் மட்டும் தான் `குறி'... ஒரு குழந்தையின் விலை வெறும் ரூ.500 - சிக்கிய 'போலி' தாய்கள்

x

திருவிழாக்கள் மட்டும் தான் `குறி'... ஒரு குழந்தையின் விலை வெறும் ரூ.500 - சிக்கிய 'போலி' தாய்கள்


தமிழகம் முழுவதும் ஆடி அமாவாசைய முன்னிட்டு

கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இதே போல் திருச்சி

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளனர். ஏராளமான மக்கள் கூட்டத்தின் நடுவே பிஞ்சு குழந்தைகளுடன் 70 க்கும் மேற்பட்ட பெண்கள்

யாசகம் எடுத்தது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சென்று விசாரித்தபோது

கைக் குழந்தைகளை 500 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து யாசகம் பெறுவது தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்தனர். செய்தியாக்க அவர்களை வீடியோ எடுக்க முயன்ற போது, சுதாரித்த பெண்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்