கைவிடப்படும் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து வழக்கு - தமிழக காவல்துறை அறிவிப்பு

x

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு காவல்துறையினால் கைவிடப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறைய உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்