யூடியூபில் சர்ச்சை கருத்து - பத்ரி சேஷாத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

x

சென்னையில் கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்திரியை குன்னம் காவல் துறையினர் பெரம்பலூர் அழைத்து சென்று, அவர் மீது 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக யூடியூபில் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக, பத்ரி சேஷாத்ரி, சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை, குன்னம் போலீசார், பெரம்பலூர் அழைத்து சென்றனர். பின்னர் பத்ரி சேஷாத்ரி மீது IPC 153 A வன்முறையை தூண்டுதல் மற்றும் IPC 153 பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்