காங்கிரஸ் நிர்வாகி மரணம் - முதல்வருக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

x

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், சடலமாக மீட்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்த‌தாக, தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்