"கார் உள்ள யார் இருக்காங்க தெரியுமா..?"பா.ரஞ்சித் உறவினரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்

x

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள பாலவேடு சுங்கச்சாவடியை காங்கிரஸ் கொடியுடன் வந்த சொகுசு கார் கடக்க முயன்றுள்ளது. அப்போது, காரின் நம்பர் பிளேட் வித்தியாசமாக இருந்ததால் ஸ்கேன் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காரில் வந்தவர்கள், சுங்கச்சாவடி ஊழியரிடம் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சமாதானம் செய்யவந்த மேற்பார்வையாளர் நேசக்குமாரையும் தாக்கிய அந்த கும்பல், காரில் இருப்பது யார் என தெரியுமா..? என கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து சுங்கச்சாவடி மேற்பார்வையாளரும், இயக்குநர் பா.இரஞ்சித்தின் உறவினருமான நேசக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன


Next Story

மேலும் செய்திகள்