கடித்த சிறிது நேரத்தில் உறைய வைத்த கண்ணாடி விரியன் விஷம் - பாம்பை கையோடு தூக்கிவந்த தொழிலாளி

x

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை கடித்த கண்ணாடி விரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் அடுத்த காவனூர் காலனியை சேர்ந்த கதிரவன் என்பவரை, கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. உடனே,பாம்பை பிடித்து பிளாஸ்டிக் கவரில் அடைத்த கதிரவன், பாம்புடன் மருத்துவமனை சிகிச்சைக்கு வந்தது, நோயாளிகளை அதிர்ச்சியடைய செய்த நிலையில், கதிரவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்