ஜன.5 மற்றும் 6-ல் வருமான வரி ஊழியர்கள் மாநாடு | Income tax

x

வருமான வரித்துறை பணியிடங்களை பிராந்திய அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் மாநாடு நடைபெற உள்ளதாக வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் எம்.எஸ் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியார்களிடம் பேசிய அவர், வருமான வரி ஊழியர் சம்மேளன 14- வது மாநில பிரதிநிதிகள் மாநாடு, வரும் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ளதாகவும், இதில் மாநிலம் முழுவதும் இருந்து, வருமான வரி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனவும் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்