தலைமை காவலர் மீது புகார்.. டி.எஸ்.பி.யின் அதிரடி ஆக்சன் | Cuddalore

x

கடலூரில், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை மறைத்து வைத்த புகாரில், தலைமை காவலரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து டி.எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்...

புத்தாண்டு தினத்தையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மதுபானம் மற்றும் சாராயம் கடத்தி வருவோரை தடுத்து நிறுத்தி, அவற்றை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர். இந்நிலையில் சோதனையில் ஈடுபட்டு வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய தலைமை காவலர் செல்வம், பறிமுதல் செய்த மதுபாட்டிலை அழிக்காமல் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் தலைமை காவலரை செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமு அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்