பணிக்கு செல்லாமல் சம்பளம் பெற ரூ.100 வசூல் என புகார்.. வெளியான வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிக்கு வராமல் சம்பளம் பெறுவதற்கு, ஊராட்சி ஊழியர்கள் 100 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாவக்கல் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் பணி புரிபவர்கள், 100 ரூபாய் பணம் கொடுத்தால் வேலைக்கு வரத் தேவையில்லை என்றும், வேலைக்கு வராவிட்டாலும் வங்கிக் கணக்கிற்கு சம்பளம் அனுப்பப்படும் என்றும் ஊராட்சி ஊழியர்கள் கூறுவதாக தெரிகிறது. ஊராட்சி ஊழியர்கள் 100 ரூபாய் வசூலிப்பதாக வீடியோவும் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்