திடீரென அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு...குழந்தைகளுக்கு தரும் முட்டைகளை கண்டு அதிர்ச்சி

x

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் சரயு திடீர் ஆய்வு மேற்கொண்ட போது பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது...

பதிவேடுகள், குழந்தைகளுக்காக வாங்கப்படும் முட்டைகளின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அங்கன்வாடி பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் குழந்தைகள் வருகை பதிவேடுகள் முறையாக இல்லாமலும், குழந்தைகளின் எடை உயரம் தவறாக பதிவு செய்து இருந்ததும் தெரிய வந்தது... கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் சிறிய அளவில் இருந்ததும், மின் விளக்கு எரியாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது... மேலும், தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள் பராமரிப்பு இன்றி கொட்டி வைக்கப்பட்டுக் கிடந்த நிலையில், முட்டை மற்றும் வருகை பதிவேடுகளை எடுத்துச் சென்ற ஆட்சியர் சரயு உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்