தீபாவளிக்கு வசூல் வேட்டை.. ரெய்டு விட்ட லஞ்ச ஒழிப்புத்துறை - அரண்டு போன அதிகாரிகள்

x

தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே கருவேல் நாயக்கன் பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கிடங்கில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்... தீபாவளியை முன்னிட்டு மதுபான கிடங்கு உயர் அதிகாரிகளுக்கு, அதன் கீழ் செயல்படும் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் மதுபான பார்களின் உரிமையாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது. மதுபான கிடங்கு மேலாளர் மற்றும் பத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தி சோதனை செய்ததில் கணக்கில் வராத 27 ஆயிரத்து 410 ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்