4.கி.மீ பேரணி... 1 லட்சம் பேர் - ரெட் ZONE ஆக மாறிய 5 ஏரியா

x

கோவைக்கு வரும் 18-ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 18-ஆம் தேதி கோவை நகருக்கு வருகை தரும் மோடி, அன்று மாலை பிரம்மாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் கலந்து கொள்கிறார். இந்த பேரணி கண்ணப்பன் நகர் பிரிவு சாலையில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் வகையில் துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை , ஆர் எஸ் புரம் ஆகிய பகுதிகள் ரெட் ஜோன்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் 19-ஆம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்