கோவையில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்! - மர்மநபர் வெறிச்செயல்

x

கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கிராஸ்கட் சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர்கள் படுத்துறங்கியபோது, ரிங்கு குமார் என்ற தொழிலாளியின் சட்டைப் பையில் மர்மநபர் ஒருவர் செல்போனை திருட முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட ரிங்கு குமாரை, மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்