ஏரியா விட்டு ஏரியா போகும் பாகுபலி யானை.. ரூட் மாறியதால் தெறித்தோடிய மக்கள்

x

கோவை மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதிக்குள் நுழைந்த பாகுபலி காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... கல்லார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி காட்டு யானை பவானி ஆற்றைக் கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்கு செல்வதற்காக குடியிருப்புகள் நிறைந்த சமயபுரம் பகுதிக்குள் நுழைந்தது. யானையைக் கண்டு தெரு நாய்கள் குரைத்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்