கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது

x

கோவை, கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், வழக்கை தேசிய புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 11 பேரை கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த சமப்வத்தில் உக்கடத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவர, அவரை கோவையில் வைத்து கைது செய்த என்ஐஏ அதிகாரிகள், முகமது இத்ரீஸை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்