வழக்கறிஞர்-புகார்தாரர் மோதல்..பேருந்து டயர் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் - நீதிமன்றம் முன்பு பரபரப்பு

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போதையில் புகார்தாரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கால்வாயை பகுதியை சேர்ந்த சுடலை முத்து என்பவருக்கும், அவரது உறவினர் மாயாண்டி என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தேவ கண்ணன் என்ற வழக்கறிஞர், மாயாண்டிக்கு ஆதரவாக வழக்காடி வருகிறார். இந்நிலையில், வழக்கறிஞர் தேவ கண்ணன் எதிர்தரப்பினருக்கு சாதகமாக நடந்து கொள்வதாக கூறி, மாயாண்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனையடுத்து மாயாண்டி, பேருந்து டயன் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்