சென்னையை பரபரப்பாக்கிய சம்பவம்- அமைச்சர் கொடுத்த உறுதி

x

மாடு முட்டியதால் காயமடைந்த சிறுமியின் மருத்துவ செலவை அரசு ஏற்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இணையவழியில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக இணையதளம் உட்பட 6 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆயிரத்து 274 படுக்கைகள் இருப்பதாகவும், படுக்கை வசதிகள் இல்லை என்பது பொய் குற்றச்சாட்டு என்றார். சிலர் வேண்டுமென்றே குறை சொல்வதற்காக இப்படி செய்வதாக தெரிவித்தார். சென்னையில் மாடு முட்டியதால் காயமடைந்த சிறுமி நலமாக இருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்