12 கிராமமக்கள் இடமாற்றம் - சென்னை உயர்நீதி மன்றம் சொன்ன கருத்து

x

புலிகள் பாதுகாப்பு திட்டத்திற்காக முதுகுழி உட்பட 12 கிராம மக்களை வேறு இடத்திற்கு மாற்ற தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது, 786 குடும்பங்களில் 681 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி, இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மீதமுள்ள குடும்பத்தினரை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் பரிசீலனையில் இருப்பதாக விளக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், 85 சதவீத குடும்பத்தினர் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை எனவும், தனிப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்