ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய மனு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் பள்ளிகொண்டாவில் உள்ள கால்வாய்க்கு செல்லும் நீர்வழிப்பாதையில், பேரூராட்சி தலைவர் சுபா பிரியா கட்டிடம் கட்டி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் மழைக்காலங்களில் வெள்ளமும், கோடை காலங்களில் வறட்சியும் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜூலை 27-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், பேரூராட்சி தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்