நீதிமன்ற உத்தரவு படி கோயிலை இடிக்க வந்த அதிகாரிகள்.. - கோயில் முன் அமர்ந்து பெண்கள் போராட்டம்

x

மதுரவாயல் மார்க்கெட் சன்னதியில் நாகாத்தாம்மன் கோயில் ஒன்று உள்ளது. சுமார் 80 வருடம் பழமை வாய்ந்ததாக கூறப்படும் இந்த கோயில், தன்னுடைய வீட்டிற்கு முன்பு இடையூறாக இருப்பதாக கூறி சாந்தி முனி ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கில், கோயிலை அகற்ற நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் கோயிலை இடிக்க அப்பகுதிக்கு வந்துள்ளனர். இதையறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 200 பேர் மற்றும் இந்து அமைப்பினர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்