"பொங்கல் பரிசுத்தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கவில்லை? - சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு

x

பொங்கல் பரிசுத்தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொங்கல் பண்டிகை பரிசுத்தொகுப்பை பெற டோக்கன் வழங்கிய தேதியில் ரேஷன் கடைக்கு சென்ற போது கடை மூடப்பட்டிருந்ததால், பரிசுத் தொகையை பெற முடியவில்லை எனவும், பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யார் யாருக்கெல்லாம் பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்கும்படி, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்