சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் போட்ட அதிரடி உத்தரவு

x

நீதிமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தனிச் சம்பளத்தை மீண்டும் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் 3 பேருக்கு 1992ஆம் ஆண்டு முதல் 5 சதவீதம் தனிச் சம்பளம் வழங்கப்பட்டது. இவற்றை மீண்டும் வசூலிக்க போவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், மூவரும் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சலுகையை அனுபவித்த பின், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் சிரமத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனர். ஒருவேளை பணம் வசூலிக்கப்பட்டால், அவற்றை 3 மாதங்களில் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்