ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர் ..பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

x

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக 37 ரேஷன் கடைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன...

ரேஷன் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அரிசி, சர்க்கரை, பருப்பு, சோப்பு, எண்ணெய், பெருங்காயம், டீ தூள், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன... கடை ஊழியர்கள் பாதிப்பை புகைப்படம் எடுத்து, காப்பீட்டுத்தொகை பெறுவதற்காக உயரதிகாரிகளுக்கு அனுப்பினர். ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை தயாரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பினர். அதைக் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்

கடையைத் திறந்த போது, மூட்டைகள் எல்லாம் பூஞ்சையாக இருந்த நிலையில், தொழிலாளர்கள், இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டனர்...

பாதிப்படைந்த மூட்டைகளும், பாதிக்கப்படாத மூட்டைகளும் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் வரும் புதன் கிழமை கடைக்கு வருமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்