ஊழியர்கள் எடுத்த திடீர் முடிவு.. சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சியான பயணிகள்

x

சென்னையில் ஊதிய உயர்வு கோரி லுப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜெர்மனி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகருக்கு லுப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானம் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தம் காரணமாக 2 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைக்காத பயணிகள், விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்