ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்... தந்தி டிவி செய்தி எதிரொலி- சீர் செய்யும் பணி தீவிரம்

x

சென்னை போரூர் அருகே குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், உடைப்பை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னறிவிப்பின்றி பூந்தமல்லி மவுண்ட் செல்லக் கூடிய சாலையில் இரும்பு தகடுகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்தனர். ஐயப்பன் தாங்கலில் இருந்து கிண்டி செல்லக்கூடிய சாலை, வளசரவாக்கம் ஆற்காடு செல்லக்கூடிய சாலை, குன்றத்தூர் செல்லும் சாலைகள் என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்