"தமிழக சுகாதார துறை அவ்வாறு அறிவிக்கவில்லை" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

x

மருத்துவ பரிந்துரையில் கேப்பிட்டல் (capital) எழுத்தில் எழுத வேண்டுமென தமிழக சுகாதாரதுறை அறிவிக்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நாளை மறுநாள் பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அவர் கூறினார். இதனிடையே, கேப்பிட்டல் எழுத்தில் மருத்துவ பரிந்துரையில் எழுத வேண்டுமென பரவிய தகவல் குறித்து விளக்கமளித்த அவர், அவ்வாறு தேசிய மருத்துவ கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும், தமிழக சுகாதாரத்துறை அது மாதிரியான அறிவிப்பை வெளியிடவில்லை எனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்