சென்னையை பரபரப்பாக்கிய ஒற்றை ஆடியோ.. அதிர்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள்.. போலீஸ் சொன்ன தகவல்

x

சென்னை உள்ளகரம், புழுதிவாக்கத்தில் பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக, சமூக வலைதளத்தில் பரவும் ஆடியோவால் பெற்றோர் அச்சப்பட தேவையில்லை போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளை குறி வைத்து, மர்ம நபர் ஒருவர், பின் தொடர்ந்து வந்து கடத்தி செல்வதாக சமூக வலைதளத்தில் ஆடியோ பரவி வருகிறது. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார், தங்களுக்கு இந்த ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ள நபர் பற்றி எந்த புகாரும் வரவில்லை என்றும், ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறினர்..


Next Story

மேலும் செய்திகள்