பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை விரட்டி, விரட்டி கடித்த தெருநாய் - சென்னையில் அதிர்ச்சி

x

ஆவடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவர்களான தேஜஸ்வன், மனிஷ் ஆகிய இருவரும் நேற்று உடற்கல்வி நேரத்தில் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு தெரு நாய் சுற்றுசுவரை தாண்டி உள்ளே வந்து இரண்டு பேரையும் விரட்டி, விரட்டி கடித்துள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த காவலாளி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். தகவலறிந்து வந்த தேஜஸ்வனின் தந்தை, மாணவனை நேராக ஆவடி மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று, நகர்நல அலுவலர் யாழினியிடம் மகனின் காயத்தை காட்டினார். தொடர்ந்து கோபத்துடன், நாய்களை பிடித்து ஏதாவது செய்யுங்கள்... என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்