21 நாளில் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்ட வழக்கு... சென்னை காவல் ஆணையர் தகவல்

x

கடந்த 21 நாட்களில், 2 பெண்கள் உட்பட 109 குற்றவாளிகள், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில், கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 186 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 64 குற்றவாளிகள் என மொத்தம் 387 பேர், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்