சென்னை பெட்ரோல் பங்க் விபத்து - இறந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

x

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேல்கூரை இடிந்து விழுந்ததில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டுமென, உறவினர் கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சிறுநல்லூரை சேர்ந்த கந்தசாமி என்பவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். இந்தசூழலில், மழையின்போது பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அவர் உயிரிழந்தார். இந்தநிலையில், கந்தசாமியின் குடும்பம் அவரது வருமானத்தை மட்டுமே நம்பி இருந்ததாக கூறியுள்ள அவரது உறவினர்கள், வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்