சென்னை OMR-யில் அழுகிய நிலையில் கிடந்த உடல்... அதிர்ச்சியில் போலீஸ்

x

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பத்தை சேர்ந்தவர் சிம்மி. திருநங்கையான இவர், கடந்த 25ம் அன்று மாயமானார். இதுதொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், OMR சாலை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு முட்புதரில், உடல் அழுகிய நிலையில் திருநங்கை சிம்மியின் உடலை போலீசார் மீட்டனர். அந்த உடலைப் பார்த்து உறுதி செய்த குடும்பத்தினர், கொலையாளிகளை கைது செய்யக்கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்