கணவர் வெளிநாடு சென்றதும் குழந்தைக்கு தாய் செய்த பகீர் காரியம்..

x

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் 2 வயது ஆண் குழந்தைக்கு சூடு வைத்து, அடித்து தாய் துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரும்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தேவி என்பவரின் கணவர் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ள நிலையில், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு அவருடைய 2 வயது மகன் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக கூறி, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையை பராமரிக்க செங்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பணிப்பெண்ணை வரவைத்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த பணிப்பெண், குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீஸ் விசாரணையில் தேவி தனது மகனின் உடலில் சூடு வைத்தும், வெந்நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து, அவரிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு, அந்த குழந்தையை குழந்தைகள் நலவாரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்