சென்னை பெருநகர காவல்துறையின் எக்ஸ் வலைதள பதிவு வைரல் | Chennai

x

பொதுவெளியில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு மட்டுமல்ல கடமையும் கூட எனக்கூறி எக்ஸ் வலைதளத்தில், சென்னை பெருநகர காவல்துறையினர் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

பதிவில் குறிப்பிட்டுள்ள சென்னை பெருநகர காவல்துறை, பொதுவெளியில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது, பாடல்கள் பாடுவது மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது போன்றவை, தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்துள்ளது. இது போன்ற குற்றங்களுக்கு மூன்று மாத சிறை தண்டையும், அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறியுள்ள சென்னை பெருநகர காவல்துறை, நாம் சாதாரணமாக நினைக்கும் சிறிய செயல்கள் கூட தண்டனைக்கு உரியவையாக இருக்கலாம் என எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்