குடியிருப்பு பகுதியில் மெட்ரோ நிர்வாகம் செய்த செயல் - மக்கள் விடுத்த கோரிக்கை

x

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் 430 சதுர மீட்டர் இடத்தை கையகப்படுத்தும் முடிவை மெட்ரோ ரயில் நிறுவனம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள 18 அடுக்குமாடி குடியிருப்பில் 324 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் அந்த இடத்தை கையகப்படுத்தினால், தங்கள் புழங்குவதற்கு பெரும் சிரமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தை தேர்வு செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்