3 வயது சிறுவனை தலையில் குத்தி தூக்கி வீசிய மாடு.. - மெரினா கடற்கரையில் அதிர்ச்சி சம்பவம்

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வையாபுரி என்பவர், சென்னை கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்று வரும் நிலையில், சம்பவத்தன்று தன் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரையில் நேரம் செலவிட்டுள்ளார். இதில், காவலரின் மூன்று வயது சிறுவன் கடற்கரை மணற்பரப்பில் விளையாடி கொண்டிருந்த நிலையில், அவரை அப்பக்கம் சென்ற மாடு ஒன்று தலையில் முட்டித் தூக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்