சென்னையில் ஹோட்டல் தண்ணீர் டிரம்மில் செத்து மிதந்த எலி.. - அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள்

x

தாம்பரத்தில் உள்ள உணவகத்தில் தண்ணீர் டிரம்முக்குள் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலைய கால் டாக்ஸி டிரைவரான பாக்யராஜ், தாம்பரம் அடுத்த லட்சுமிபுரத்தில் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திவிட்டு டிரம்மில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்துள்ளார். அப்போது தண்ணீர் டிரம்முக்குள் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உணவக உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அடிக்கடி உணவகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்