சீமான் தொடர்ந்த வழக்கு... நீதிபதியின் ஒரே கேள்வி.. அடுத்து வந்த உத்தரவு

x

சீமான் தொடர்ந்த வழக்கு.. நீதிபதியின் ஒரே கேள்வி.. அடுத்து வந்த உத்தரவு

சீமான் தொடர்ந்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக ஏப்ரல் இரண்டாம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகுமாறு விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பெங்களூருவில் வசித்து வரும் விஜயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆஜராக விரும்பாவிட்டால் மனுவை ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விஜயலட்சுமி ஆஜராக ஏப்ரல் 2ம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார். அன்றைய தினம் நேரில் ஆஜராக முடியாவிட்டால் காணொலி மூலம் ஆஜராக அனுமதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்