சைக்கிளில் சென்ற முதியவரின் உயிரை பறித்த வெயில்...- சென்னையில் அதிர்ச்சி..

x

சென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூலக்கடையில் இருந்து மாதவரத்திற்கு சைக்கிளில் சென்ற அந்த முதியவர், மாதவரம் தபால் பெட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சுருண்டு விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள், அவரை சாலையோரம் கொண்டு வந்துபார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த மாதவரம் காவல் நிலைய போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்