பெங்களூரு திருப்பி விடப்பட்ட சென்னை விமானங்கள்

x

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை சார்ஜா, துபாய் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரூக்கு திருப்பி விடப்பட்டன

பாங்காக், பாரீஸ் உள்பட 10 விமான சேவை பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நள்ளிரவு முதல் திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சார்ஜா, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் தரை இறங்குவதற்காக வந்தது. அந்த நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்தன. பின்னர் 2 விமானங்களும் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மழை ஓய்ந்தும் திருப்பி விடப்பட்ட 2 விமானங்களும் சென்னை வந்தன.

அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பாங்காக், துபாய், மும்பை, பாரீஸ், தோகா ஐதராபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் 15 நிமிடங்களில் அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னையில் காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்